-->

Nobel Award Winner for Literature - 2020

இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு!: அமெரிக்காவின் லூயிஸ் க்ளுக்
2020 ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசினை லூயிஸ் க்ளுக் என்ற அமெரிக்காவைச் சேர்ந்த பெண் கவிஞர் பெறுகிறார். இவர் 1943 இல் நியூயார்க்கில் பிறந்தார். மாசசூசெட்ஸின் கேம்பிரிட்ஜில் வசிக்கிறார். இவர் கவிஞர் மட்டுமின்றி, நியூ ஹெவனில் உள்ள யேல் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

லூயிஸ் க்ளுக்: இலக்கியப் பரிசு பெற்ற லூயிஸ் க்ளுக், 1968 ஆம் ஆண்டில் ‘பர்ஸ்ட் பார்ன்’ என்ற கவிதை மூலம் அறிமுகமானார். பின்னர் அமெரிக்க சமகால இலக்கியத்தில் மிக முக்கியமான கவிஞர்களில் ஒருவராக பாராட்டப்பட்டார். அவர் 12 கவிதைத் தொகுப்புகளையும், கவிதைகள் குறித்த சில கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார். இவரது படைப்புகள் தெளிவுக்கான முயற்சிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. ‘அவெர்னோ(Averno)’ (2006) ‘Faithful and Virtuous Night’ (2014) உள்ளிட்ட பல படைப்புகளை தந்துள்ளார்.



Related Posts

Post a Comment

Subscribe Our Posting