Type Here to Get Search Results !

TNPSC Group 4 General Tamil Important Questions and Answers published by Dinamani Part- 3

Dinamani Newspaper Published important question of TNPSC (Tamil Nadu Public  Service Commission) Exam.  


TNPSC குரூப் 4, குரூப் 2 தேர்வுக்கான பொதுத்தமிழ் பாடக் குறிப்புகள். இதைத் படித்து நடைபெற இருக்கும் TNPSC குரூப் 4 தேர்வில் வெற்றிபெற வாழ்த்துகள்.

நன்றி: தினமணி நாளிதழ் 

இலக்கணமும் மொழித்திறனும்
  • நாம் பேசும் மொழி மற்றும் எழுதும் மொழியை முறையாகப் புரிந்து கொள்வதற்கு தேவைப்படுவது - இலக்கணம்.
  • அ - எழுத்து குறிப்பது மனிதனை.
  • |- என்ற முதுகுக்கோடு குறிப்பது - பழங்காலத்தில் வேட்டை ஆடுவதற்கு மனிதன் முதுகில் சுமந்த அம்புக்கூட்டைக் குறிக்கிறது.
  • மனிதர்களை போன்று இனமும் நட்பும் கொண்டது - எழுத்துக்கள்.
  • ங் என்னும் எழுத்துக்கும் பின்னால் வரும் இன எழுத்து க. எ.கா: சிங்கம், தங்கை.
  • ஞ் என்னும் எழுத்துக்கும் பின்னால் வரும் இன எழுத்து ச. எ.கா: மஞ்சள், அஞ்சாதே
  • ண்ட, ந்த, ம்ப, ன்ற என்னும் எழுத்துகள் பெரும்பாலும் சேர்ந்தே வரும். எசகா: பண்டம், பந்தல், கம்பன், தென்றல்.
  • நட்பு எழுத்துக்களை இன எழுத்துகள் என இலக்கணம் கூறுகிறது.
  • க், ச்,த், ப் ஆகிய மெய்யெழுத்துக்கள் தன் எழுத்துகளுடன் மட்டும் சேரும். எ.கா: பக்கம், அச்சம், மொத்தம், அப்பம்.
  • தன் எழுத்துடன் சேராது பிற எழுத்துகளுடன் சேரும் மெய்யெழுத்து - ர், ழ். எ.கா: சார்பு, வாழ்க்கை
  • முயற்சி திருவினை ஆக்கும் எனக் கூறியவர் - திருவள்ளுவர்.
  • கவலையை மறக்க உரிய வழி - ஏதாவதொரு வேலையில் ஈடுபடுவது.
  • எண்பத்தேழு வயதுவரை உ.வே.சா. தமிழுக்காக உழைத்தார். முயற்சிக்கு வயது வரம்பு கிடையாது.
  • முயற்சிக்கு நோய் தடை இல்லை.
நாலடியார்
  • சொற்பொருள்:
  • அணியார் = நெருங்கி இருப்பவர்
  • என்னாம் = என்ன பயன்?
  • சேய் = தூரம்
  • செய் = வயல்
  • அனையர் = போன்றோர்
  • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று - நாலடியார்.
  • நானூறு பாடல்களைக் கொண்டது - நாலடியார்.
  • அறக்கருத்துக்களைக் கூறுவது - நாலடியார்.
  • நாலடி நானூறு என்ற சிறப்பு பெயர் உடையது - நாலடியார்.
  • சமண முனிவர்கள் பலர் பாடிய தொகுப்பு நூல் - நாலடியார்.
பதினெண்கீழ்க்கணக்கு:
  • சங்க நூல்கள் எனப்படுபவை பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும், பத்துப்பாட்டில் பத்து நூல்களும், எட்டுத்தொகையில் எட்டு நூல்களுமாக மொத்தம் பதினொட்டு நூல்கள். - இவற்றை மேல்கணக்கு நூல்கள் எனக் கூறுவர்.
  • சங்கநூல்களுக்குப்பின் தோன்றிய நூல்களின் தொகுப்பு - பதினெண்கீழ்க்கணக்கு
  • பதினெண் என்பது - பதினெட்டு என்று பொருள்.
  • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் பெரும்பாலானவை - அறநூல்களே.
  • கீழ்க்கணக்கு நூல்கள் எனவும் கூறப்படும் நூல் - பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்.
  • நன்மை செய்வோர் வாய்க்காலைப் போன்றவர்.
சொற்பொருள்:
  • வண்மை = கொடை (வன்மை = கொடுமை)
  • உழுபடை = விவசாய கருவிகள்
  • தமிழ்மகள் = ஒளவையார்.
  • கோணி - சாக்கு
  • தலை சாயுதல் - ஓய்ந்து படுத்தல்
  • ஞாலம் - உலகம்
  • உவந்து செய்வோம் - விரும்பிச் செய்வோம்
  • நெறியினின்று - அறநெறியில் நின்று
  • சாதி இரண்டொழிய வேறில்லை என்றவர் - ஒளவையார்.
  • தமிழ்மகள் எனபடுபவர் - ஒளவையார்.
  • தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கவிஞர் - பாட்டுக்கொரு புலவன் பாரதியார்.
  • காலம்: 11.12.1882 - 11.09.1921
  • பாட்டுக்கொரு புலவன் பாரதி என்றவர் கவிமணி.
Courtesy: Dinamani
நன்றி: தினமணி நாளிதழ்

குறிப்பு:
1. வாசகர்கள் மற்றும் போட்டியாளர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை deenapmn@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.

Post a Comment

0 Comments

Labels