2019-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
- 2019ம் ஆண்டுக்கான தமிழ்த்தாய் விருது, சிகாகோ தமிழ்ச்சங்கத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தமிழ்த்தாய் விருதுடன் ரூ.5 லட்சம், நினைவுப்பரிசு, பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.
விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களின் விவரம்:
- கபிலர் விருது - புலவர் வெற்றி அழகன்
- உ.வே.சா. விருது - வெ.மகாதேவன்
- கம்பர் விருது - முனைவர் சரஸ்வதி ராமநாதன்
- சொல்லின் செல்வர் விருது - முனைவர் கவிதாசன்
- மறைமலை அடிகளார் விருது - முத்துக்குமாரசாமி
- முதலமைச்சரின் கணினித் தமிழ் விருது - நாகராசன்
- அம்மா இலக்கிய விருது - உமையாள் முத்து
- மொழி பெயர்ப்பாளர் விருது - மாலன்
- இளங்கோவடிகள் விருது - கவிக்கோ ஞானச் செல்வன்(எ) திருஞானசம்பந்தம்
- உமறுப்புலவர் விருது - லியாகத் அலிகான்
- மொழியியல் விருது - இலங்கை முனைவர் சுபதினி ரமேஷ்
- சிங்காரவேலர் விருது - அசோகா சுப்பிரமணியன்
- அயோத்திதாஸப் பண்டிதர் விருது - பிரபாகரன்
- ஜி.யு. போப் விருது - மரிய ஜோசப் சேவியர்
பரிசுத்தொகை:
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த விருதுகளுடன் ரூ.1 லட்சம், ஒரு சவரன் தங்கப் பதக்கமும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.