Ads 720 x 90

TNPSC Current Affairs Today (Tamil Medium) Date: 23.01.2019 Download PDF

Welcome to the Current Affairs Section of TNPSC Master.COM. This section is a store house of  DAILY CURRENT AFFAIRS starts from 2019. These questions mainly focused for TNPSC / TRB - TET / UPSC  / SSC and other state public service examinations. Presently, we (TNSPC MASTER) published everyday for Current Affairs Sections.

Important Current Affairs for TNPSC / UPSC / RRB / TRB /SSC and all other State Service Commission Examination. These Current Affairs section fulfill for all Competitive Exams Aspirants specially for TNPSC Aspirants.


நாட்டிலேயே பொருளாதாரத்தில் சிறந்த இரண்டாவது மாநிலம் தமிழகம்
நாட்டிலேயே பொருளாதாரத்தில் சிறந்த இரண்டாவது மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று  சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில் முதல்வர் பழனிசாமி பேசியுள்ளார்.

உலக முதலீட்டாளர் மாநாடு: வானூர்தி, பாதுகாப்பு தொழில் கொள்கை வெளியீடு
உலக முதலீட்டாளர் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில்  23.01.2019 அன்று தொடங்கியது. மாநாட்டை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தார். மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில், தமிழ்நாடு வானூர்தி மற்றும் பாதுகாப்பு தொழில் கொள்கை-2019-ஐ மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார்.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கிரடாய் ரூ.1,700 கோடிக்கு ஒப்பந்தம்
சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் திருச்சி கிரடாய் அமைப்பு ரூ.1,700 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய இருப்பதாக அந்த அமைப்பின் தலைவர் எஸ்.ஆனந்த் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

முத்ரா திட்டத்தில் நாடு முழுவதும் 26 கோடி பேருக்கு கடன்
முத்ரா வங்கித் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 26 கோடிப் பேருக்கு சிறு தொழில் கடன் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அதவாலே தெரிவித்தார்.

சென்னையில் மாணவர் காவல் படை தொடக்கம்
சென்னையில் மாணவர் காவல் படை 22.01.2019 அன்று தொடங்கப்பட்டது. பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் நோக்கத்திலும், பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களிடம் விழிப்புணர்வை வளர்க்கும் வகையில் தமிழக காவல்துறை, வருவாய்த் துறை,பள்ளிக் கல்வித்துறை ஆகியவை இணைந்து மாணவர் காவல் படை என்ற புதிய மாணவர் படையை உருவாக்கியுள்ளன.

தில்லியில் நேதாஜி நினைவு அருங்காட்சியகத்தை துவக்கி வைத்தார் மோடி
இந்திய விடுதலை போராட்ட வரலாற்றில் 'இந்திய தேசிய ராணுவம்' என்ற படைப்பிரிவை துவக்கி ஆயுதப் போராட்டத்தில் மகத்தான பங்கு வகித்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். அவரது பிறந்தநாள் நினைவை போற்றும் வகையில் தில்லி செங்கோட்டையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அருங்காட்சியகத்தை பிரதமர் நரேந்திர மோடி 23.01.2019 நாளன்று திறந்து வைத்தார்.

ராவி நதி மீது புதிய பாலம்: நிதின் கட்கரி திறந்து வைத்தார்
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ராவி நதி மீது கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி 22.01.2019 நாளன்று திறந்து வைத்தார்.

10% இட​ஒ​துக்​கீடு: அஸ்​ஸாம் ஒப்​பு​தல்
பொ​துப் பிரி​வில் பொரு​ளா​தார ரீதி​யா​கப் பின்​தங்​கி​யோ​ருக்கு 10 சத​வீ​தம் இட​ஒ​துக்​கீடு அளிக்க வகை செய்​யும் சட்டத்தை அஸ்​ஸாம் மாநி​லத்​தில் அமல்​ப​டுத்த அந்த மாநில அரசு ஒப்​பு​தல் அளித்​துள்​ளது.

காபு சமூ​கத்​தி​ன​ருக்கு 5% உள்​ஒ​துக்​கீடு: ஆந்​திர அரசு அறி​விப்பு
மத்​திய அரசு கொண்டு வந்​துள்ள புதிய 10 சத​வீத ஒதுக்​கீட்​டின் கீழ், பொரு​ளா​தா​ரத்​தில் பின்​தங்​கிய பொதுப்​பி​ரி​வி​ன​ருக்கு 5 சத​வீத இட​ஒ​துக்​கீடு வழங்​கப்​ப​டும் என்று ஆந்​திர அரசு அறி​வித்​துள்​ளது. மீத​முள்ள 5 சத​வீ​தத்தை காபு சமூக மக்​க​ளுக்கு உள்​ஒ​துக்​கீ​டாக வழங்க முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது என்​றும் மாநில அரசு தெரி​வித்​துள்​ளது.

ஐசிசி ஆண்​டின் டெஸ்ட், ஒரு நாள் அணி​கள் கேப்​ட​னாக கோலி தேர்வு
ஐசிசி ஆண்​டின் டெஸ்ட், ஒரு நாள் அணி​க​ளின் கேப்​ட​னாக விராட் கோலி நிய​மிக்​கப்​பட்​டுள்​ளார். ஆண்​டு​தோ​றும் ஐசிசி சார்​பில் பல்​வேறு நாடு​க​ளின் சிறந்த வீரர்​களை கொண்ட டெஸ்ட் மற்​றும் ஒரு நாள் அணி​கள் அறி​விக்​கப்​ப​டு​வது வழக்​கம். அதே போல் 2018 ஆம் ஆண்​டுக்​கான அணி​களை அறி​வித்​துள்​ளது ஐசிசி. இவற்​றின் கேப்​ட​னாக கோலி நிய​மிக்​கப்​பட்​டுள்​ளார்.

Post a Comment

0 Comments