Ads 720 x 90

TNPSC Current Affairs Today (Tamil Medium) Date: 12.01.2019 Download PDF

Welcome to the Current Affairs Section of TNPSC Master.COM. This section is a store house of  DAILY CURRENT AFFAIRS starts from 2019. These questions mainly focused for TNPSC / TRB - TET / UPSC  / SSC and other state public service examinations. Presently, we (TNSPC MASTER) published everyday for Current Affairs Sections.

Important Current Affairs for TNPSC / UPSC / RRB / TRB /SSC and all other State Service Commission Examination. These Current Affairs section fulfill for all Competitive Exams Aspirants specially for TNPSC Aspirants.

தமிழகம் 

தாமிரவருணியில் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுக்க இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாமிரவருணி ஆற்றில் தண்ணீர் எடுக்க 21 தொழிற்சாலைகளுக்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இத்தாலி நிறுவனத்துடன் சென்னை ஐஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம்
நிலைத்த நீடித்த எரிசக்தித் துறையில் கூட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளும் வகையில் இத்தாலி நிறுவனத்துடன் சென்னை ஐஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. நிலைத்த நீடித்த எரிசக்தித் துறையில் கூட்டு ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக இத்தாலியைச் சேர்ந்த சோடாகார்போ என்ற நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, இரு நிறுவனங்களும் பயோ-மாஸ் வாயு உற்பத்தி, கரியமில வாயுவிலிருந்து மெத்தனால் உருவாக்குவது போன்ற ஆராய்ச்சிகள் கூட்டாக மேற்கொள்ளப்படும். 

தமிழக பொருளாதாரத்தில் கட்டுமானத் துறை 30% பங்களிப்பு
தமிழகத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் கட்டுமானத்துறைக்கு 30 சதம் பங்களிப்பு உள்ளதாக தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலர் எஸ். கிருஷ்ணன் தெரிவித்தார்.

நீர்-நில வளத் திட்டம்: தமிழக அரசு, அமெரிக்க பல்கலை. புரிந்துணர்வு ஒப்பந்தம்
தமிழக அரசு மற்றும் அமெரிக்க நாட்டின் கார்னெல் பல்கலைக்கழகத்துக்கு இடையே நீர் மற்றும் நில வளத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 11.01.2019 அன்று கையெழுத்தானது.

தேசியம் - இந்தியா 
சிபிஐ இயக்குநர் அலோக் குமார் வர்மா ராஜிநாமா
சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து தீயணைப்புத் துறைக்கு மாற்றப்பட்ட அலோக் குமார் வர்மா, தனது பணியைத் தொடர மறுத்து வெள்ளிக்கிழமை ராஜிநாமா செய்தார். ஏற்கெனவே ஓய்வு பெறும் வயதை எட்டி விட்டதால் தன்னை ஓய்வு பெற்றவராகக் கருத வேண்டும் என்று கூறி, மத்தியப் பணியாளர் மற்றும் பயிற்சித் துறைக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார்

யுபிஎஸ்சி உறுப்பினராக டி.சி.ஏ. அனந்த் நியமனம்
மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தின்(யுபிஎஸ்சி) உறுப்பினராக முன்னாள் தலைமை புள்ளியியலாளர் டி.சி.ஏ. அனந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

நேபாள ராணுவத் தளபதிக்கு இந்திய ராணுவத்தின் உயரிய விருது
நேபாள ராணுவத்தின் தலைமைத் தளபதி பூர்ண சந்திர தாபாவுக்கு, இந்திய ராணுவ ஜெனரல் என்ற உயரிய விருது வழங்கப்படவுள்ளது. தில்லியில் 12.01.2019 அன்று  நடைபெறும் விழாவில் இந்த விருதை சந்திர தாபாவுக்கு, இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி கெளரவிக்கவுள்ளார்.

சார்தாம் நெடுஞ்சாலை திட்டப் பணிகள்: உச்சநீதிமன்றம் அனுமதி
உத்தரகண்ட் மாநிலம், இமயமலைப் பகுதியில் உள்ள கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி உள்ளிட்ட நான்கு புனித தலங்களை இணைக்கும் வகையில் ரூ. 12, 000 கோடி செலவில் நெடுஞ்சாலை அமைக்க கொண்டு வரப்பட்ட சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் பணிகளை தொடர உச்சநீதிமன்றம் 11.01.2019 அன்று  அனுமதியளித்தது.

வணிகம் மற்றும் பொருளாதாரம் 
நாட்டின் தொழில்துறை உற்பத்தி விகிதம் 0.5 சதவீதமாக குறைவு
நாட்டின் தொழில்துறை உற்பத்தி விகிதம் சென்ற நவம்பர் மாதத்தில் 0.5 சதவீதமாக குறைந்து போனது. இது, 17 மாதங்களில் இல்லாத குறைந்தபட்ச அளவாகும் என மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தேசிய பங்கு சந்தை தலைவர் அசோக் சாவ்லா ராஜினாமா
தேசிய பங்கு சந்தை தலைவர் அசோக் சாவ்லா நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்  என்.எஸ்.இ., எனப்படும் தேசிய பங்குச் சந்தையின் தலைவராக கடந்த 2016-ம் ஆண்டு நியமிக்கப்பட்டவர், அசோக் சாவ்லா, 65. மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியான இவர்.  11.01.2019 அன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

குஜராத் உலக வர்த்தக மாநாடு: 18இல் பிரதமர் தொடங்கி வைக்கிறார்
குஜராத்தில் 9ஆவது உலக வர்த்தக மாநாட்டை வரும் 18.01.2019 ஆம் நாளன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். மாநாடு வரும் ஜனவரி 18ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை 3 நாள்கள் காந்திநகரில் நடைபெற உள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர் டெபாசிட் அதிகரிப்பு
வெளிநாடு வாழ் இந்தியர்கள், 2018, நவம்பரில், இந்திய வங்கிகளில் செய்த டெபாசிட், 415 கோடி டாலர் அதிகரித்து, 12 ஆயிரத்து, 568 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இது, அக்டோபரில், 12 ஆயிரத்து, 153 கோடி டாலராக இருந்தது.

அறிவியல் தொழில்நுட்பம் 
360 கோணத்தில் நிலவின் இருண்ட பகுதி: படமெடுத்து அனுப்பியது சீன ஆய்வுக் கலம்
பூமியிலிருந்து பார்த்தால் தெரியாத நிலவினுடைய பின் பகுதியின் 360 டிகிரி கோண படத்தை, சீனாவின் சாங் இ-4 விண்கலம் முதல் முறையாக பூமிக்கு அனுப்பியுள்ளது. பிரத்யேக செயற்கைக்கோள் வழியாக இந்தப் படம் அனுப்பப்பட்டதையடுத்து, சாங் இ-4 ஆய்வுத் திட்டம் முழு வெற்றியடைந்துள்ளதாக சீனா  11.01.2019 அன்று அறிவித்தது.

விண்ணுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் 2021-இல் செயல்படுத்தப்படும்
2021-ஆம் ஆண்டில் விண்ணுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று இந்திய விண்வெளி ஆய்வு மையத் (இஸ்ரோ) தலைவர் கே.சிவன் தெரிவித்தார்.

விளையாட்டு 
நாட்டின் தொழில்துறை உற்பத்தி விகிதம் 0.5 சதவீதமாக குறைவு
நாட்டின் தொழில்துறை உற்பத்தி விகிதம் சென்ற நவம்பர் மாதத்தில் 0.5 சதவீதமாக குறைந்து போனது. இது, 17 மாதங்களில் இல்லாத குறைந்தபட்ச அளவாகும் என மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஆஸி. ஓபன் போட்டியுடன் ஓய்வு: கண்ணீருடன் அறிவித்தார் ஆன்டி முர்ரே
ஆஸி. ஓபன் டென்னிஸ் போட்டியுடன் பிரிட்டனைச் சேர்ந்த முன்னாள் உலகின் நம்பர் ஒன் வீரர் ஆன்டி முர்ரே (31) ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை கண்ணீருடன் தெரிவித்தார்.

விராட் கோலி, ரவிசாஸ்திரிக்கு சிட்னி கிரிக்கெட் மைதான கெளரவ உறுப்பினர் அந்தஸ்து
இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு சிட்னி கிரிக்கெட் மைதானம் (எஸ்சிஜி)யின் வாழ்நாள் கெளரவ உறுப்பினர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் மற்றும் மைதானத்தின் வரலாற்றில் இருவரது பங்களிப்பையும் பாராட்டும் வகையில் எஸ்சிஜி நிர்வாகம் இந்த கெளரவத்தை வழங்கியுள்ளது. ஏற்கெனவே சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா ஆகியோர் மட்டுமே இந்த கெளரவத்தை பெற்றுள்ளனர்.

Post a Comment

0 Comments