Ads 720 x 90

New Books 6th Standard: Important Notes of Tamil Books (Part - 14)


"பராபரக்கண்ணி" 
எல்லாஉயிர்களிடத்தில் அன்பு காட்ட வேண்டும் என்னும் சிந்தனையை வலியுறுத்தும் வகையில் "பராபரக்கண்ணி" நூலின் மூன்று கண்ணிகள் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. 

" நீங்கள் நல்லவர்" - கலீல் ஜிப்ரான்
யாப்பிலக்கணக் கட்டுக்குள் அடங்காத கருத்துச்செறிவு மிக்க கவிதைகளே வசனகவிதையாகும்.  அத்தனைய வசன கவிதை வடிவில் " நீங்கள் நல்லவர்" என்னும் கலீல் ஜிப்ரான் கவிதை அமைந்துள்ளது.

மணிமேகலை 
"உண்டிக்கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே" என்னும் புறநானூற்றுப் புலவர் குடபுலவியனார் கருத்திற்கேற்ப அரும்பணி செய்தவர் மணிமேகலை 

கலீல் ஜிப்ரான் - பற்றி 
  • பிறந்த இடம்: லெபனான் 
  • வாழ்ந்த இடம்: அமெரிக்கா 
  • மொழிவளம்: அரபு மற்றும் ஆங்கிலம் 
  • புகழ்பெற்ற தத்துவக்கவிதை நூல்: தீர்க்கதரிசி 
ஆதிரை மற்றும் மணிமேகலை 
  • புகார் நகரில் வாழ்ந்த சாதுவனின் மனைவி: ஆதிரை 
  • ஆதிரையிடம் உணவு பெற்றவள்: மணிமேகலை 
பராபரக்கண்ணி - தாயுமானவர் 
  • தாயுமானவர் பராபரமே (மேலான பொருள்) என்று விழித்து பாடியதால் இந்தநூல் பராபரக்கண்ணி எனப்பெயர்பெற்றது.
  • தாயுமானவர் பாடல்களின் தொகுப்பு  - திருப்பாடல் திரட்டு 
தாயுமானவரின் புகழ்பெற்ற வரிகள் 
"நெஞ்சகமே கோயில் நினைவே 
சுகந்தம் அன்பே 
மஞ்சனநீர் பூசைகொள்ள வாராய் 
பராபரமே "

ஐம்பெரும் காப்பியங்கள்
  • சிலப்பதிகாரம் (எழுதியவர் – இளங்கோ அடிகள்)
  • மணிமேகலை – சீத்தலைச் சாத்தனார்
  • சீவக சிந்தாமணி – திருத்தக்க தேவர்
  • குண்டலகேசி – நாகுதத்தனார்
  • வளையாபதி – பெயர் கிடைக்கவில்லை
(கடைசி இரண்டு நூல்களும் முழுமையாகக் கிடைக்கவில்லை.)

ஐஞ்சிறு காப்பியங்கள்
  • சூளாமணி
  • நீலகேசி – தோலாமொழித் தேவர்
  • உதயணகுமார காவியம்
  • நாககுமார காவியம்
  • யசோதா காவியம்

Post a Comment

0 Comments