ஒளவையார்
- மூதுரை - ஒளவையார் எழுதிய நீதிநூல்களில் இதுவும் ஒன்று.
- வாக்குண்டாம் எனது தொடங்குவதால் இந்நூலை "வாக்குண்டாம்" எனும் பெயரால் அழைப்பர்.
- இதில் 31 வெண்பாக்கள் உள்ளது.
- பழமையான கருத்துக்களை கூறுவதால் மூதுரை என்று அழைக்கப்படுகிறது.
- சங்ககாலம் முதல் பிற்காலம் வரை ஒளவையார் எனும் பெயரில் பெண்பாற்புலவர்கள் பலர் வாழ்ந்துள்ளனர். இவர்கள் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்த்துள்ளனர்.
ஒளவையார் எழுதிய நூல்கள்.
- ஆத்திசூடி
- கொன்றை வேந்தன்
- நல்வழி
- மூதுரை
அண்ணா நூற்றான்டு நூலகம்
- அறிஞர் அண்ணா அவர்களின் 101 ஆம் ஆண்டு பிறந்தநாளாகிய 15.09.2010 அன்று அண்ணா நூற்றான்டு நூலகம் திறக்கப்பட்டது.
- இதன் பரப்பளவு 3.75 லட்சம் சதுர அடிகள்
- யுனெஸ்கோவின் உலக இணைய மின்நூலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
- பசுமையாக்கத்திற்க்கான தங்கத்தரச் சான்று பெற்றுள்ளது (First Green House Building Library in India).
- ஆசியாவின் முதல் பெரிய நூலகம் சீனாவில் உள்ள தேசிய நூலகம்.
- ஆசியாவின் இரண்டாவது பெரிய நூலகம் அண்ணா நூற்றான்டு நூலகம்
- ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 முதல் 20 வரை தேசிய நூலக வாரவிழா கொண்டாடப்படுகிறது.
- பிரான்சு நாட்டைச் சேர்ந்த லூயி பிரெய்ல் என்பவரால் 1821 - ல் உருவாக்கப்பட்ட பிரெய்ல் எழுத்துமுறை பார்வையற்றோருக்கு படிக்க உதவியாக உள்ளது.
- பிரெய்ல் எழுத்து ஆறு புள்ளிகள் கொண்ட செவ்வகக் கலம் ஆகும்.
காமராசர்: கல்விக்கண் திறந்தவர்
காமராசர் ஆட்சியில் கல்வி வளர்ச்சி
- தொடக்கப்பள்ளிகளின் எண்ணிக்கை 15800 ல் இருந்து 29000 ஆக உயர்ந்தது.
- உயர்நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கை 367 ல் இருந்து 1995 ஆக உயர்ந்தது.
- மாணவர்கள் எண்ணிக்கை 19 லட்சத்தில் இருந்து 40 லட்சமாக உயர்ந்தது.
காமராசரின் தமிழ் வளர்ச்சி பணிகள்
- 1957-58 ஆம் ஆண்டு முதன் முதலாக நிதி நிலை அறிக்கை தமிழிலே சமர்க்கப்பட்டது.
- 1956 - ல் தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தை நிறைவேற்றினார்.
- 1959-ல் தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்றத்தை உருவாக்கினார்.
- தமிழ்ப்பாட நூல் வெளியீட்டுக் கழகத்தைத் தோற்றுவித்தார்.
- தமிழ் வழியில் பயின்றோருக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்தார்.
Post a Comment