Type Here to Get Search Results !

TNPSC Group 4 General Tamil Important Questions and Answers published by Dinamani Part- 1

Dinamani Newspaper Published important question of TNPSC (Tamil Nadu Public  Service Commission) Exam.  

TNPSC குரூப் 4, குரூப் 2 தேர்வுக்கான பொதுத்தமிழ் பாடக் குறிப்புகள். இதைத் படித்து நடைபெற இருக்கும் TNPSC குரூப் 4 தேர்வில் வெற்றிபெற வாழ்த்துகள்.

நன்றி: தினமணி நாளிதழ் 

ஆறாம் வகுப்பு: வாழ்த்து - திருவருட்பா

கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான்என்
எண்ணில் கலந்தே இருக்கின்றான் - பண்ணில்
கலந்தான்என் பாட்டில் கலந்தான் உயிரில்
கலந்தான் கருணை கலந்து
  • திருவருட்பாவை எழுதியவர் - இராமலிங்க அடிகளார்
  • சிறப்பு பெயர் - திருவருட்பிரகாச வள்ளலார்
  • பிறப்பிடம் - கடலூர் மாவட்டம் மருதூரில் பிறந்தவர்.
  • பெற்றோர் - இராமையா - சின்னமையார்
  • வாழ்ந்த காலம்: 05.10.1823 - 30.01.1874
  • எழுதிய நூல்கள்: ஜீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறைகண்ட வாசகம்.
  • பசித்துயர் போக்கி மக்களுக்கு உணவளிக்க இராமலிங்க அடிகளார் அமைத்தது - அறச்சாலை
  • அறிவு நெறி விளங்க வள்ளலார் நிறுவியது - ஞானசபை
  • சமர சன்மார்க்க நெறிகளை வழங்கியவர் - இராமலிங்க அடிகளார்.
  • இராமலிங்க அடிகளார் பாடிய பாடலின் தொகுப்பிற்கு பெயர் - திருவருட்பா.
  • வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய மனம் கொண்டவர் - இராமலிங்க அடிகளார்
  • வள்ளலார் பாட்டை "மருட்பா" என்று கூறியவர் - ஆறுமுக நாவலர்.
  • கடவுளை "கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான்", என்றும் "உயிரில் கலந்தான் கருணை கலந்து" என்றும் பாடியவர் - இராமலிங்க அடிகளார்.
  • நூல்கள்: ஜீவகாரூன்ய ஓழுக்கம், மனுமுறை கண்ட வாசகம்.
  • வள்ளலாரின் பாடல்கள் அனைத்தும் திருவருட்பா என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன.
  • சிறப்பு: சமரச சன்மார்க்க நெறியை வழங்கினார்.
  • மத நல்லிணக்கத்திற்கு சன்மார்க்க சங்கத்தையும், உணவளிக்க அறச்சாலை, அறவுநெறி விளங்க ஞான சபையையும் நிறுவினார்.
  • வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய கருணை மனம் இவருடையது.
  • கருணை நிறைந்த இறைவன் என் கண்ணில், சிந்தனையில், எண்ணத்தில், பாட்டில், பாட்டின் இசையில், என் உயிரில் கலந்து இருக்கிறான்.
  • அறிவுரைப் பகுதி: திருக்குறள் - அன்புடைமை
சொற்பொருள்:
  • ஆர்வலர் - அன்புடையவர்
  • புன்கணீர் - துன்பம் கண்டு பெருகும் கண்ணீர்
  • என்பு - எலும்பு. இங்கு உடல், பொருள், ஆவியைக் குறிக்கிறது.
  • வழக்கு - வாழ்க்கை நெறி
  • நண்பு - நட்பு
  • மறம் - வீரம், கருணை (வீரம் இரண்டிற்குமே
  • அன்புதான் அடிப்படை என்பது பொருள்)
  • அன்பிலது - அன்பில்லாத உயிர்கள்
  • என்பிலது - எலும்பில்லாதது(புழு)
  • பூசல் தரும் - வெளிப்பட்டு நிற்கும்
  • ஆருயிர் - அருமையான உயிர்
  • ஈனும் - தரும்
  • ஆர்வம் - விருப்பம் (வெறுப்பை நீக்கி விருப்பத்தை
  • உண்டாக்கும் என்று பொருள்)
  • வையகம் - உலகம்
  • என்ப - என்பார்கள்
  • புறத்துறுப்பு - உடல் உறுப்புகள்
  • எவன் செய்யும் - என்ன பயன்?
  • அகத்துறுப்பு - மனத்தின் உறுப்பு, அன்பு
பிரித்து எழுதுக:
  • அன்பகத்தில்லா = அன்பு + அகத்து + இல்லா -அன்பு உள்ளத்தில் இல்லாத
  • வன்பாற்கண் = வன்பால் + கண் - பாலை நிலத்தில்
  • தளிர்த்தற்று - தளிர்த்து + அற்று - தளிர்த்ததுபோல
  • வற்றல்மரம் - வாடிய மரம்
திருவள்ளுவர்
  • இவரின் காலம் கி.மு. 31 என்று கூறுவர்.
  • இதனை தொடக்கமாக கொண்டே திருவள்ளுவர் ஆண்டு கண்க்கிடப்படுகிறது.
  • சிறப்பு பெயர்: தெய்வப்புலவர், நாயனார், செந்நாப்போதர்
  • இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என மூன்று பெரும் பிரிவுகளை உடையது.
  • அதிகாரங்கள்: 133
  • அதிகாரத்திற்கு 10 குறட்பாக்கள் வீதம் 1330 குறட்பாக்கள் உள்ளன.
  • இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  • திருக்குறளின் வேறு பெயர்கள்: உலக பொதுமறை, முப்பால், தமிழ்மறை. உலகப் பொதுமறை எனப் போற்றப்படுகிறது.
  • திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடும் முறை: கிறித்து ஆண்டு (கி.பி) + 31 = திருவள்ளுவர் ஆண்டு.
  • எடுத்துக்காட்டு: 2013 + 31 = 2044. கி.பி.2013ஐத் திருவள்ளுவர் ஆண்டு 2044 என்று கூறுவோம்.
ஏழாம் வகுப்பு: செய்யுள் - வாழ்த்து
  • பண்ணினை இயற்கை வைத்த எனப் தொடங்கும் வாழ்த்துப் பாடலை இயற்றியவர் - திரு.வி.கல்யாணசுந்தரனார்.
சொற்பொருள்:
  • பண் - இசை
  • வண்மை - கொடைத்தன்மை
  • போற்றி - வாழத்துகிறேன்
  • இருக்கை - ஆசனம்
  • திரு.வி.க என்பதன் விரிவாக்கம்
  • திருவாரூர் விருத்தாசலனார் மகனார் கலியாணசுந்தரனார்.
  • திரு.வி.க வின் பெற்றோர்
  • விருத்தாசலனார் - சின்னம்மையார்
  • திரு.வி.கலியாணசுந்தரனார் பிறந்த ஊர் - காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள துள்ளம்.
  • துள்ளம் தற்பொழுது எவ்வாறு அழைக்கப்படுகிறது? - தண்டலம் (இவ்வூர் சென்னையை அடுத்துள்ள போரூருக்கு மேற்கே உள்ளது)
திரு.வி.க வின் சிறப்பு:
  • இவர் தொழிலாளர் நலனுக்கும் பெண்கள் முன்னேற்றத்திற்கும் அயராது பாடுபட்டார். மேடைத் தமிழுக்கு இலக்கணம் வகுத்தார். இவரின் தமிழ்நடையைப் போற்றித் "தமிழ்த் தென்றல்" என சிறப்பிக்கப்படுகிறார்.
திரு.வி.கலியாணசுந்தரனார் படைப்புகள் யாவை?
  • மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்
  • பெண்ணின் பெருமை
  • தமிழ்த்தென்றல்
  • உரிமை வேட்கை,
  • முருகன் அல்லது அழகு முதலியன.
  • திரு.வி.க அவர்கள் வாழ்ந்த காலம் என்ன? - 26.08.1883 - 17.09.1953
  • திரு.வி.க இயற்றிய வாழ்த்துப் பாடல் எந்நூலில் இடம் பெற்றுள்ளது? - பொதுமை வேட்டல்
  • பொதுமை வேட்டல் என்னும் நூல் எந்தத் தலைப்பில் இடம் பெற்றுள்ளது? - போற்றி
  • பொதுமை வேட்டல் எதனைக் கடந்து உலகத்தை ஒரு குடும்பமாகக் கருதுகிறது? - நாடு, மதம், இனம், மொழி, நிறம்
  • தெய்வ நிச்சயம் முதலாகப் போற்றி ஈறாக எத்தனை தலைப்புகளில் உள்ளது? - நாற்பத்து நான்கு தலைப்புகளில், நானூற்று முப்பது பாக்களால் ஆனது இந்நூல்.
நூல் பயன்:
  • இந்நூலைக் கற்பார்க்கு நாடு, மதம், மொழி, இன வேற்றுமைகள் விலகும்; சமுதாய ஒற்றுமை வளரும், மனித நேயம் மலரும், உலகம் தழுவிய ஒருமைப்பாட்டுணர்வு உண்டாகும்.
  • பொதுமை வேட்டல் எத்தனை பாக்களால் ஆனது? - நானூற்று முப்பது
  • சென்னையில் உள்ள எந்தப் பள்ளியில் தமிழாசிரியராக திரு.வி.க அவர்கள் பணியாற்றினார்? - இராயப்பேட்டை வெஸ்லி பள்ளி
  • இறைவன் உயிரில் வைத்தது எதனை? - இறைவன் கொடைத்தன்மையை உயிரில் வைத்தார்.
  • இறைவனின் இருக்கை யாது? - இறைவனின் இருக்கை உண்மை.
திருக்குறள்

சொற்பொருள்:
  • புரை - குற்றம்
  • பயக்கும் - தரும்
  • சுடும் - வருத்தும்
  • அன்ன - அவை போல்வன
  • எய்யாமை - வருந்தாமல்
  • அகம் - உள்ளம்
  • அமையும் - உண்டாகும்.
ஆசிரியர் குறிப்பு:
  • திருவள்ளுவர் சுருங்க சொல்லி விளங்க வைப்பதில் வல்லவர்.
சிறப்பு பெயர்கள்:
  • நாயனார், முதற்பாவலர், நான்முகனார், மாதானுபாங்கி, செந்நாப்போதார், பெருநாவலர்
நூல் குறிப்பு:
  • மனிதன் மனிதனாக வாழ, மனிதன் மனிதனுக்குக் கூறிய அறவுரை தான் திருக்குறள்.
  • இந்நூல் அறத்துப்பால், பொருட்ப்பால், இன்பத்துப்பால் என்னும் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டது.
  • ஒவ்வோர் அதிகாரத்திற்கும் பத்துக் குறட்பாக்கள் என ஆயிரத்து முந்நூற்று முப்பது குறட்பாக்கள் உள்ளன.
  • இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  • இது 107 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

1. திருவள்ளுவரின் பெற்றோர் யார்?
விடை: தாயின் பெயர் - ஆதி

2. தந்தையின் பெயர்? 
விடை: பகவன்

3. திருவள்ளுவர் எந்த ஊரில் பிறந்தார்?
விடை:மயிலாப்பூர் (மதுரை என்றும் கூறுவர்)

4. திருவள்ளுவர் யாரால் வளர்க்கப்பட்டார்?
விடை: வள்ளுவன் ஒருவனால் வளர்க்கப்பட்டார்.

5. வள்ளுவன் என்றால் பொருள் யாது?
விடை: அரசருக்கு அந்தரங்க ஆலோசனை கூறும் ஓர் உயர்ந்த அலுவலர்

6. திருவள்ளுவரின் மனைவியின் பெயர் என்ன?
விடை: வாசுகி

7. வாசுகி யாருடைய மகள்?
விடை: மார்க்கசகாயர் என்னும் வேளாளரின் மகள்

8. திருவள்ளுவர் செய்த தொழில் என்ன?
விடை: நெசவுத் தொழில்

9. திருவள்ளுவரின் வேறு பெயர்கள் என்ன?
விடை: நாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வப் புலவர், நான்முகன், மாதானுபங்கி, செந்நாப் போதார், பெருநாவலர், பொய்யில் புலவர் என்பன.

10. திருவள்ளுவர் காலம் எது?
விடை: கி.மு. 31

11. திரு என்னும் அடைமொழியைப் பெற்றுத் திருக்குறள் என வழங்கப் பெறுகிறது.

12. திருக்குறள் எத்தனை பிரிவுகளைக் கொண்டது? அவை யாவை?
விடை:  மூன்று பிரிவுகளைக் கொண்டது.
1. அறத்துப்பால்
2. பொருட்பால்
3. இன்பத்துப்பால்

13. இந்நூல் திருக்குறள் என்று எதனால் பெயர் பெற்றது?
விடை: திரு+குறள். மேன்மையான குறள் வெண்பாக்களால் இயற்றப்பட்டதால் இப்பெயர் பெற்றது.

14. திருக்குறள் 133 அதிகாரங்களை உடையது.

15. திருக்குறள் ஒவ்வொரு அதிகாரத்திற்கும் எத்தனை பாடல்களை கொண்டது?
விடை: பத்து

16. திருக்குறள் நூலின் பயன் யாது?
விடை: திருக்குறள் கற்பதனால் மனித வாழ்க்கை செம்மையுறும். பண்புகள் வளரும், உலகெல்லாம் ஒன்றெனும் உயர்குணம் தோன்றும், மனிதர்களிடையே வேறுபாடுகள் மறையும், எல்லா உயிரிடத்தும் அன்பு தழைக்கும்.

17. உடலை நீர் தூய்மை செய்யும்: வாய்மை உள்ளத் தூய்மையை வெளிப்படுத்தும்.

18. வாய்மை என்றால் என்ன?
விடை: மற்றவர்களுக்குத் தீங்கு தராத சொற்களைப் பேசுதல்.

20. திருக்குறள் எத்தனை குறட்பாக்களால் ஆனது?
விடை: ஆயிரத்து முந்நூற்று முப்பது

21. திருக்குறள் ஏன் உலகப் பொதுமறை என்று வழங்கப் பெறுகிறது?
விடை: உலகம் ஏற்கும் கருத்துக்களைக் கொண்டுள்ளதால் இவ்வாறு வழங்கப் பெறுகிறது.

பிரித்து எழுதுக:
  • யாதெனின் - யாது + எனின்
  • பொய்யாதொழுகின் - பொய்யாது + ஒழுகின்
  • சொற்றொடரில் சொற்களை அமைத்தல்:
  • இயற்கை - குற்றாலத்தில் உள்ள இயற்கைக் காட்சிகள் உள்ளத்தைக் கவர்கின்றன.
  • பெண்மை - பாரதியார் பெண்மையைப் போற்றிப் பாடியுள்ளார்.
  • வாய்மை - வாய்மையே வெல்லும் என்ற தொடர் தமிழக அரசின் சின்னத்தில் உள்ளது.
  • உள்ளம் - குழந்தையின் உள்ளண் கள்ளம் புகா இடமாகும்
Courtesy: Dinamani
நன்றி: தினமணி நாளிதழ்

குறிப்பு:
1. வாசகர்கள் மற்றும் போட்டியாளர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை deenapmn@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.

Post a Comment

0 Comments

Labels