TNPSC Master publishes relevant fact based Current Affairs almost daily basis. In this current affairs helps you and useful for General Awareness part of TNPSC, UPSC, SSC IBPS Banking and other State Public Service Commission examination. TNPSC Master is a compilation of recent current events. In This section is updated almost daily events, Innovation, Achievement, Awards and New Appointments etc
இந்திய நகரங்களில் தென்னாப்பிரிக்க சுற்றுலா கண்காட்சி
தென்னாப்பிரிக்காவின் சுற்றுலாவை மேம்படுத்த "ஒவ்வொரு நொடியும் ஆச்சர்யம்' என்ற தலைப்பில் சென்னை, பெங்களூரு, தில்லி, மும்பை ஆகிய நகரங்களில் சுற்றுலா கண்காட்சியை அந்நாட்டு சுற்றுலாக் குழு நடத்தி வருகிறது.
பாரம்பரிய ஆணையத்தில் உறுப்பினர் நியமனம்: பேரவையில் மசோதா தாக்கல்
தொல்பொருள் ஆராய்ச்சி பற்றி அறிந்திருக்கும் நபரை, தமிழ்நாடு பாரம்பரிய ஆணையத்தில் உறுப்பினராக நியமிக்க வகை செய்யும் சட்ட மசோதா பேரவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை பள்ளிக்கல்வி, விளையாட்டு, இளைஞர் நலத் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தாக்கல் செய்தார்.
பள்ளிப் பாடத்தில் காயிதே மில்லத் வாழ்க்கை வரலாறு
வரும் கல்வியாண்டில் இருந்து அரசின் பள்ளிப் பாடத் திட்டத்தில் காயிதே மில்லத்தின் வாழ்க்கை வரலாறு இடம்பெறும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் கூறினார்.
எண்ணூர் துறைமுகம் அருகே சரக்குக் கப்பல்கள் மோதல்
எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகே இரண்டு சரக்குப் கப்பல்கள் சனிக்கிழமை மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு கப்பலிலிருந்து கசிந்த எண்ணெய் படலமாக எர்ணாவூர் ராமகிருஷ்ணா நகர் அருகே கரை ஒதுங்கியது. இந்த எண்ணெய்ப் படலத்தை அகற்றுவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது
பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடக்கம்: ஒருங்கிணைந்த பட்ஜெட் நாளை தாக்கல்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் செவ்வாய்க்கிழமை (ஜன.31) தொடங்குகிறது. ஒருங்கிணைந்த பட்ஜெட் (பொது பட்ஜெட்டுடன் இணைந்த ரயில்வே பட்ஜெட்) புதன்கிழமை (பிப்.1) தாக்கல் செய்யப்படுகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் 2 அமர்வுகளாக நடைபெறுகிறது. இதில் முதல் அமர்வு செவ்வாய்க்கிழமை (ஜன.31) முதல் பிப்ரவரி 9-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதன்பிறகு இரு அவைகளும் ஒத்திவைக்கப்படும். பின்னர், மார்ச் மாதம் 9-ஆம் தேதி 2-ஆவது அமர்வு தொடங்குகிறது. ஏப்ரல் 12-ஆம் தேதியுடன் பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவடைகிறது. நிகழ் ஆண்டின் முதல் கூட்டத் தொடர் இது என்பதால், நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி செவ்வாய்க்கிழமை உரை நிகழ்த்துகிறார். கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே பட்ஜெட்டுக்கு முந்தைய பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்யவுள்ளார்.பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடக்கம்: ஒருங்கிணைந்த பட்ஜெட் நாளை தாக்கல்
சர்வதேச இந்திய தோல்பொருள்கள் கண்காட்சி: இன்று தொடக்கம்
சர்வதேச -இந்திய தோல் பொருள்கள் கண்காட்சி சென்னையில் செவ்வாய்க்கிழமை (ஜன.31) தொடங்க உள்ளது. சென்னை வர்த்தக மையத்தில் 32 -ஆவது சர்வதேச இந்திய தோல் பொருள்கள் கண்காட்சியை அமைச்சர் கருப்பண்ணன் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைக்கிறார். இதைத்தொடர்ந்து, இந்த கண்காட்சி பிப்ரவரி 3 -ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்க உள்ளது.
காந்தி நினைவிடத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர் மலரஞ்சலி
தேசப் பிதா மகாத்மா காந்தியின் 69-ஆவது நினைவுதினத்தை ஒட்டி தில்லி ராஜ்காட்டில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் திங்கள்கிழமை மலரஞ்சலி செலுத்தினர்.
முஸ்லிம்கள் குடியேற்றத் தடை: அமெரிக்காவில் வலுக்கிறது எதிர்ப்பு
முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட 7 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா வருவதற்குத் தடை விதித்து, அதிபர் டொனால்ட் டிரம்ப் பிறப்பித்துள்ள உத்தரவுக்கு எதிரான போராட்டங்கள் அமெரிக்கா முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (29.01.2017) மேலும் தீவிரமடைந்தன.
பாகிஸ்தான்: வீட்டுக் காவலில் ஹஃபீஸ் சயீது
மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குச் சதித் திட்டம் தீட்டிய ஜமாத்-உத்-தாவா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹஃபீஸ் சயீது, லாகூரில் திங்கள்கிழமை வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
பிரபஞ்ச அழகியாக பிரான்ஸ் மருத்துவ மாணவி தேர்வு
பிலிப்பைன்ஸில் நடைபெற்ற 2017-ஆம் ஆண்டின் பிரபஞ்ச அழகிக்கான போட்டியில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மருத்துவ மாணவி ஐரிஷ் மிட்டனேரே வெற்றி பெற்றுள்ளார். 2017-ஆம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகிக்கான போட்டி பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. பல்வேறு கட்ட தேர்வுகளுக்கு பிறகு, இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இவர்களில் சிறப்பாக செயல்பட்ட பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஐரிஷ் மிட்டனரே, பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாவது இடத்தை ஹைதி நாட்டைச் சேர்ந்த ரகுவல் பெலிசியரும், மூன்றாவது இடத்தை கொலம்பியாவின் ஆண்ட்ரியா டோவரும் பெற்றனர்.
பணப்பட்டுவாடா வங்கி சேவையை தொடங்கியது இந்தியா போஸ்ட்
இந்தியா போஸ்ட் முதல் முதலாக பணப்பட்டுவாடா வங்கி சேவையை திங்கள்கிழமை தொடங்கியது. பணப்பட்டுவாடா வங்கி தொடங்குவதற்கான உரிமத்தை ரிசர்வ் வங்கியிடமிருந்து அஞ்சலகத் துறை அண்மையில் பெற்றது. அதையடுத்து, முதல் கட்டமாக ராய்பூர் மற்றும் ராஞ்சி நகரங்களில் சோதனை அடிப்படையில் இந்தியா போஸ்ட் பணப்பட்டுவாடா வங்கி சேவை திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. இந்த வங்கியில் ரூ.25,000 வரையிலான டெபாசிட்டுகளுக்கு 4.5 சதவீத வட்டியும், ரூ.25,000-ரூ.50,000 வரையிலான டெபாசிட்டுகளுக்கு 5 சதவீத வட்டியும், ரூ.50,000-ரூ.1,00,000 வரையிலான டெபாசிட்டுகளுக்கு 5.5 சதவீத வட்டியும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
பிசிசிஐயை நிர்வகிக்க முன்னாள் சிஏஜி வினோத் ராய் தலைமையில் 4 பேர் குழு
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை (பிசிசிஐ) நிர்வகிப்பதற்கு முன்னாள் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி (சிஏஜி) வினோத் ராய் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது உச்ச நீதிமன்றம். ஓய்வு பெற்ற நீதிபதி லோதா குழுவின் பரிந்துரைகள் முழுமையாக அமல்படுத்தப்பட்டு பிசிசிஐக்கு முறைப்படி புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படும் வரை வினோத் ராய் தலைமையிலான குழுவே பிசிசிஐயை நிர்வகிக்கும்.
தரவரிசை: செரீனா , பிரிட்டனின் ஆன்டி முர்ரே முதலிடம்
மகளிர் ஒற்றையர் டென்னிஸ் தரவரிசையில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். முன்னதாக 2-ஆவது இடத்தில் இருந்த செரீனா, ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பரை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளார். கெர்பர் 2-ஆவது இடத்திலும், செக்.குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா 3-ஆவது இடத்திலும் உள்ளனர். பிரிட்டனின் ஆன்டி முர்ரே, செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா ஆகியோர் முறையே முதல் 3 இடங்களில் உள்ளனர்.
மாநில அளவிலான கராத்தே: நாமக்கல் வீரர்கள் சாம்பியன்
மாநில அளவிலான கராத்தே போட்டி நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 650 பேர் பங்கேற்ற இந்தப் போட்டியில் நாமக்கல் கராத்தே வீரர்கள் சாம்பியன் பட்டம் பெற்றனர்.
மாநில அளவிலான பீச் வாலிபால்: நாகை, சேலம் அணிகள் சாம்பியன்
நாகையில் நடைபெற்ற முதல்வர் கோப்பைக்கான மாநில பீச் வாலிபால் போட்டியின் ஆடவர் பிரிவில் நாகை அணியும், மகளிர் பிரிவில் சேலம் அணியும் முதலிடம் பிடித்தன. 2016-17 முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான பீச் வாலிபால் போட்டி நாகையில் சனிக்கிழமை தொடங்கி நடைபெற்றது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற இப்போட்டியில், தமிழகத்தின் 32 மாவட்டங்களைச் சேர்ந்த ஆடவர், மகளிர் அணிகள் பங்கேற்றன.
வரலாற்றில் இன்று :(31st January)
- நவூறு விடுதலை தினம்(1968)
- அமெரிக்காவின் வெற்றிகரமான முதலாவது செய்மதியான எக்ஸ்புளோரர் 1 விண்ணுக்கு ஏவப்பட்டது(1958)
- யூகொஸ்லாவியாவில் சோவியத் முறையிலான அரசியலமைப்பு கொண்டு வரப்பட்டு, 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டது(1946)
- தமிழக முன்னாள் முதல்வர் எம்.பக்தவத்சலம் இறந்த தினம்(1987)
- ஜனவரி 31 கிரிகோரியன் ஆண்டின் 31 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 334 (நெட்டாண்டுகளில் 335) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1606 – இங்கிலாந்து மன்னன் முதலாம் ஜேம்சிற்கு எதிராகவும் நாடாளுமன்றத்திற்கெதிராகவும் சதி முயற்சியில் இறங்கியமைக்காக காய் ஃபோக்ஸ் என்பவன் தூக்கிலிடப்பட்டான்.
1747 – பால்வினை நோய்களுக்கான முதலாவது மருத்துவ நிலையம் லண்டனில் லொக் மருத்துவமனையில் நிறுவப்பட்டது.
1876 – அனைத்து இந்தியப் பழங்குடிகளும் அவர்களுக்கென அமைக்கப்பட்ட சிறப்பு இடங்களுக்கு செல்லுமாறு ஐக்கிய அமெரிக்க அரசு உத்தரவிட்டது.
1915 – முதலாம் உலகப் போர்; ஜெர்மனி ரஷ்யாவுக்கெதிராக நச்சு வாயுவைப் பயன்படுத்தியது.
1928 – லியோன் ட்ரொட்ஸ்கி கசக்ஸ்தானுக்கு நாடுகடத்தப்பட்டார்.
1937 – சோவியத் ஒன்றியத்தில் 31 த்ரொட்ஸ்கி ஆதரவளர்கள் தூக்கிலிடப்பட்டனர்.
1944 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படைகள் ஜப்பான் வசமிருந்த மார்ஷல் தீவுகளில் தரையிறங்கினார்கள்.
1946 – யூகொஸ்லாவியாவில் சோவியத் முறையிலான அரசியலமைப்பு கொண்டுவரப்பட்டு நாடு பொசுனியா எர்செகோவினா, குரொவேஷியா, மக்கெடோனியா, மொண்டெனேகுரோ, சேர்பியா மற்றும் சிலவேனியா என ஆறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது.
1953 – வட கடல் பெருக்கெடுத்தன் விளைவாக நெதர்லாந்தில் 1,800 பேர் கொல்லப்பட்டனர்.
1958 – ஐக்கிய அமெரிக்காவின் வெற்றிகரமான முதலாவது செய்மதி எக்ஸ்புளோரர் 1 விண்ணுக்கு ஏவப்பட்டது.
1961 – நாசாவின் மேர்க்குரி-ரெட்ஸ்டோன் 2 விண்கலம் ஹாம் என்ற சிம்பன்சி ஒன்றை விண்ணுக்குக் கொண்டு சென்றது.
1968 – வியட்நாம் போர்: வியட் கொங் படைகள் சாய்கொன் நகரில் அமெரிக்க தூதராலயத்தைத் தாக்கினர்.
1968 – நவூறு (Nauru) ஆஸ்திரேலியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1980 – குவாத்தமாலாவில் ஸ்பெயின் தூதராலய முற்றுகையில் 39 பேர் உயிருடன் தீயிட்டுக் கொல்லப்பட்டனர்.
1990 – சோவியத் ஒன்றியத்தில் முதலாவது மாக்டொனால்ட் உணவகம் மாஸ்கோவில் திறக்கப்பட்டது.
1996 – கொழும்பு மத்திய வங்கியின் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 86 பேர் கொல்லப்பட்டு 1,400 பேர் வரை படுகாயமடைந்தனர்.
2003 – ஆஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வோட்டர்ஃபோல் என்ற இடத்தில் தொடருந்து ஒன்று தடம்புரண்டதில் சாரதி உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
1762 – லக்லான் மக்குவாரி, காலனித்துவ நிர்வாகி (இ. 1824)
1797 – பிராண்ஸ் சூபேர்ட், ஆஸ்திரிய இசையமைப்பாளர் (இ. 1828)
1881 – ஏர்விங் லாங்முயர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (இ. 1957)
1902 – ஆல்வா மீர்டல், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1986)
1929 – ருடொல்ஃப் மொஸ்பாவர், நோபல் பரிசு பெற்ற ஜெர்மனியர்.
1935 – கென்சாபுரோ ஓயீ, நோபல் பரிசு பெற்ற ஜப்பானிய எழுத்தாளர்
இறப்புகள்
1580 – கர்தினால் ஹென்றி, போர்த்துக்கல், இலங்கை மன்னன் (பி. 1512)
1933 – ஜோன் கல்ஸ்வோதி, நோபல் பரிசு பெற்ற ஆங்கில எழுத்தாளர் (பி. 1867)
1950 – டைகர் வரதாச்சாரியார், கருநாடக இசைக் கலைஞர் (பி. 1976)
1955 – ஜோன் மொட், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1865)
1973 – ராக்னர் ஆண்டன் ஃபிரீஷ், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1895)
1987 – எம். பக்தவத்சலம், தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர் (பி. 1897)
2009 — நாகேஷ், நகைச்சுவை நடிகர் (பி. 1933)
Post a Comment