Welcome to the Current Affairs Section of TNPSC Master.COM. This section is a store house of DAILY CURRENT AFFAIRS starts from 2019. These questions mainly focused for TNPSC / TRB - TET / UPSC / SSC and other state public service examinations. Presently, we (TNSPC MASTER) published everyday for Current Affairs Sections.
Important Current Affairs for TNPSC / UPSC / RRB / TRB /SSC and all other State Service Commission Examination. These Current Affairs section fulfill for all Competitive Exams Aspirants specially for TNPSC Aspirants.
தொழில் முதலீட்டில் தமிழகம் 2-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது
தொழில் முதலீட்டில் தமிழகம் 2-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பெருமிதம் தெரிவித்தார்.
சாகித்ய அகாதெமியின் மொழி பெயர்ப்பு விருதுகள்: தமிழ் மொழிப் பிரிவில் குளச்சல் மு. யூசுஃப் தேர்வு
2018-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி மொழி பெயர்ப்பு விருதுகள் 28.01.2019 அன்று அறிவிக்கப்பட்டது. இதில் கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் மு.யூசுஃப்பிற்கு தமிழ் மொழி பெயர்ப்புக்கான விருது கிடைத்துள்ளது. ஜி.ஆர். இந்துகோபனின் "மணியன் பிள்ளையுட ஆத்ம கதா' எனும் மலையாள சுயசரிதையை "திருடன் மணியன்பிள்ளை' எனும் பெயரில் தமிழில் மொழியாக்கம் செய்த குளச்சல் மு.யூசுஃப் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். மொத்தம் 24 பேர் இந்த மொழிபெயர்ப்புக்கான விருது பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். விருதுக்குத் தேர்வானவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் பரிசுத் தொகை, தாமிரப் பட்டயம் ஆகியவை வழங்கப்படும்.
பயணிகள் வருகை அதிகமுள்ள விமான நிலையம்: துபை தொடர்ந்து முதலிடம்
சர்வதேச அளவில் பயணிகள் வருகை அதிகமுள்ள விமான நிலையங்களின் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபை சர்வதேச விமான நிலையம் தொடர்ந்து 5-ஆவது ஆண்டாக முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. சர்வதேச அளவில் பயணிகள் வருகை அதிகமுள்ள விமான நிலையங்களின் பட்டியலில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் துபை முதலிடத்தில் உள்ளது. அதற்கு முன்பு லண்டன் ஹீத்ரோவ் விமான நிலையம் முதலிடத்தில் இருந்தது.
அதிக விமானங்கள் வந்து செல்லும் விமான நிலையம்: ஹார்ட்ஸ்ஃபீல்ட் ஜாக்சன் அட்லாண்டா முதலிடம்
சர்வதேச அளவில் அதிக விமானங்கள் வந்து செல்லும் விமான நிலையங்களின் வரிசையில் அமெரிக்காவின் ஜார்ஜியா மாகணத்தில் உள்ள ஹார்ட்ஸ்ஃபீல்ட் ஜாக்சன் அட்லாண்டா சர்வதேச விமான நிலையம் முதலிடத்தில் உள்ளது.
2017-18 நிதியாண்டில் அந்நிய நேரடி முதலீடு 18% அதிகரிப்பு
2017-18 நிதியாண்டில் இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு 18% அதிகரித்து, ரூ.28.25 லட்சம் கோடியாக உள்ளது. ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) 28.01.2019 அன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017-18-ஆம் நிதியாண்டில் அந்நிய நேரடி முதலீடு ரூ.4.33 லட்சம் கோடி அதிகரித்து, ரூ.28.24 லட்சம் கோடியாக உள்ளது. இந்தியாவில் அதிகம் அந்நிய நேரடி முதலீடு செய்துள்ள நாடுகள் பட்டியலில் 19.7 சதவீத முதலீட்டுடன் மோரீஷஸ் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகள் உள்ளன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அம்பட்டி ராயுடு பந்துவீசத் தடை: ஐசிசி அறிவிப்பு
இந்திய வீரர் அம்பட்டி ராயுடுவின் பந்துவீச்சு, கிரிக்கெட் விதிமுறைகளுக்குப் புறம்பாக இருப்பதால் சர்வதேசப் போட்டிகளில் அவர் பந்துவீசுவதற்குத் தடை விதித்துள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி). பந்துவீசும்போது ராயுடுவுடைய முழங்கை ஐசிசியால் அனுமதிக்கப்பட்ட அளவான 15 டிகிரிக்கு மேல் வளைவது கண்டறியப்பட்டது. இந்நிலையில் தற்போது, சர்வதேசப் போட்டிகளில் ராயுடு பந்துவீசுவதற்குத் தடை விதித்துள்ளது ஐசிசி. அம்பட்டி ராயுடு உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசால் வெளியிடப்பட்ட கொள்கை வெளியீடு
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மாம்பாக்கம் பகுதியில், கண்ணாடிப் பொருள்களை உற்பத்தி செய்யும் செயின்ட் கோபைன் என்ற தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்தத் தொழிற்சாலையில் மூன்றாவது உற்பத்திப் பிரிவின் தொடக்க விழா தொழிற்சாலை வளாகத்தில் 28.01.2019 அன்று நடைபெற்றது. தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அந்தப் பிரிவைத் திறந்துவைத்துப் பேசியது:
- தொலைநோக்குத் திட்டம்-2023
- தமிழ்நாடு தொழில் கொள்கை-2014
- மோட்டார் வாகனங்கள் மற்றும் உதிரி பாகங்கள் கொள்கை-2014
- உயிரி தொழில்நுட்பக் கொள்கை-2014
- தகவல் தொடர்பு தொழில்நுட்பவியல் கொள்கை 2018
- தமிழ்நாடு வானூர்தி மற்றும் பாதுகாப்பு தொழில் கொள்கை-2019 ஆகியவை தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளன.
- திருத்தப்பட்ட தமிழ்நாடு சூரிய சக்தி கொள்கை விரைவில் வெளியிடப்படும்.
தொழில் முதலீடு பற்றி தமிழக முதல்வர் தெரிவித்தவை
இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாகவும், தொழில் மயமாக்கப்பட்ட மாநிலங்களில் முன்னணி மாநிலமாகவும் தமிழ்நாடு திகழ்கிறது. சமீபத்தில் நாடாளுமன்றத்தில் அந்நிய நேரடி முதலீடு குறித்து ரிசர்வ் வங்கி சமர்ப்பித்த அறிக்கையில் தமிழ்நாட்டில் 2017-2018ஆம் ஆண்டில் கூடுதலாக 56 சதவீதம் முதலீடு பெறப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில் முதலீட்டில் 6ஆம் இடத்தில் இருந்த தமிழ்நாடு கடந்த ஆண்டில் (2018) 2ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ரூ.3 லட்சத்து 431 கோடிக்கு தொழில் முதலீடுகள் வர உள்ளன. 10 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு மேல் வேலைவாய்ப்புகளைப் பெற உள்ளதாகவும் கூறியார்.
Post a Comment