Type Here to Get Search Results !

TNPSC: காவிரி இறுதித் தீர்ப்பு தமிழகத்துக்கு தண்ணீர் குறைப்பு

TNPSC (Expected for Current Affairs Notes)
காவிரி இறுதித் தீர்ப்பு: தமிழகத்துக்கு தண்ணீர் குறைப்பு
  • காவிரியிலிருந்து தமிழகத்துக்கு ஆண்டுக்கு 177.25 டிஎம்சி நீரை அடுத்த 15 ஆண்டுகளுக்கு கர்நாடகம் திறந்து விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பளித்துள்ளது.
 தீர்ப்பின் விவரம்
  • உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அமித்வா ராய், ஏ.எம். கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு வெள்ளிக்கிழமை தீர்ப்பு அளித்தது. 465 பக்கங்கள் கொண்ட இத்தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய விவரங்கள்:
  • காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் ஒதுக்கீடு செய்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
  • காவிரியில் தமிழகத்துக்கு 192 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றம் ஒதுக்கியிருந்த நிலையில், உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உத்தரவிட்டுள்ளது.
  • இந்த தீர்ப்பின் மூலம், தமிழகத்துக்கு 14.75 டிஎம்சி தண்ணீர் குறைவாகக் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
  • காவிரியில் இருந்து 264 டிஎம்சி தண்ணீர் வேண்டும் என்று தமிழகம் கோரியிருந்தது. ஆனால், 2007ல் காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பில் தமிழகத்துக்கு 192  டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
  • இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பில், தமிழகத்தில் 20 டிஎம்சி அளவுக்கு நிலத்தடி நீர் உள்ளது. எனவே, காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உத்தரவிட்டுள்ளது.
  • காவிரியில் இருந்து 284.75 டிஎம்சி தண்ணீரை கர்நாடகாவுக்கு ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் கர்நாடகாவுக்கு கூடுதலாக 4.75 டிஎம்சி தண்ணீர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • காவிரி தொடர்பாக 1892, 1924 ஆகிய ஆண்டுகளில் கையெழுத்தான ஒப்பந்தங்கள் அரசியல் ஏற்பாட்டையோ, இந்திய இறையாண்மையையோ தொடர்புபடுத்தவில்லை. இந்த விவகாரத்தில் அரசியலமைப்புச் சட்டம் 363-ஆவது பிரிவு பொருந்தாது.
 வழக்கு கடந்து வந்த பாதை.

  • 1974 - மதராஸ் பிரெசிடென்சிக்கும் மைசூர் அரசாட்சிக்கும் இடையே 1924-ம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தம் காலாவதியானது.
  • 1990 மே - காவிரி நடுவர் மன்றம் அமைக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
  • ஜூன் 2 - காவிரி நடுவர் மன்றம் அமைக்க அரசாணை பிறப்பிப்பு
  • 2018 பிப். 16 - இறுதி தீர்ப்பு அறிவிப்பு - தமிழகத்துக்கு மொத்தம் 404.25 டிஎம்சி ஆண்டுதோறும் வழங்க உத்தரவு. முன்பு 419 டிஎம்சியாக இருந்தது.
Courtesy: Dinamani 

Post a Comment

0 Comments

Labels