TNPSC Group 4 Certificate Verification Declared:
- குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் 15-ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளதாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
- குரூப்-4 பிரிவில் தட்டச்சு பணியில், 314 காலிப்பணியிடங்களுக்கு கடந்த 2014 -ஆம் ஆண்டு எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான 2-ஆம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு வருகின்ற 15-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை சென்னை அரசுப்பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதற்காக 481 விண்ணப்பதாரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
- சான்றிதழ் சரிபார்ப்பிற்கான அழைப்புக் கடிதம் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விரைவு அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் சான்றிதழ் சரிபார்த்தலுக்கான அட்டவணை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Courtesy: Dinamani
Post a Comment