2016-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருதுகள் தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் வண்ணதாசன் உள்பட பல்வேறு மொழிகளைச் சேர்ந்த 24 எழுத்தாளர்களுக்கு புதன்கிழமை வழங்கப்பட்டன. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், பெங்காலி, ஹிந்தி, குஜராத்தி, மைதிலி உள்பட 24 இந்திய மொழிகளில் வெளியான சிறுகதை, கவிதைகள், நாவல், கட்டுரை, திறனாய்வு அல்லது விமர்சனம் ஆகிய படைப்புகளில் சிறந்தவை தேர்வு செய்யப்பட்டு 2016-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருதுகள் கடந்த டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்டன.
- இதில், தமிழகத்தின் திருநெல்வேலியைச் சேர்ந்த எழுத்தாளர் வண்ணதாசனின் "ஒரு சிறு இசை' என்ற சிறுகதைத் தொகுப்பு நூலும் விருதுக்குத் தேர்வானது. எழுத்தாளர்கள் வண்ணதாசன் (தமிழ்), பிரபா வர்மா (மலையாளம்), பபினேனி சிவசங்கர் (தெலுங்கு), நஸீரா சர்மா (ஹிந்தி) உள்பட 24 மொழிகளைச் சேர்ந்த எழுத்தாளர்களுக்கு சாகித்ய அகாதெமி விருதுகளை வழங்கினார். படைப்புகளின் எழுத்தாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும், பாராட்டுப் பட்டயமும் வழங்கப்பட்டது.
- திருநெல்வேலியைச் சேர்ந்த எழுத்தாளர் வண்ணதாசனின் இயற்பெயர் சி. கல்யாண சுந்தரம் (71). கல்யாண்ஜி என்ற பெயரில் கவிதைகளும், வண்ணதாசன் என்ற பெயரில் சிறுகதைகளும் எழுதி வருபவர். இவரது தந்தையும், திறனாய்வாளருமான மறைந்த தி.க.சிவசங்கரன் 2000-இல் சாகித்ய அகாதெமி விருதைப் பெற்றிருந்தார். இந்நிலையில், 16 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அவரது மகனான வண்ணதாசன் இந்த விருதைப் பெற்றுள்ளார்.
Courtesy: Dinamani
Post a Comment