Ads 720 x 90

அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள் - TNPSC General Tamil

அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள்

கற்றறிந்தோர் ஏத்தும் தொகை, நூற்றைம்பது கலி  என்று அழைக்கப்படும் நூல்  - கலித்தொகை

தமிழ்க் கருவூலம் என்று அழைக்கப்படும் நூல்  -  புறநானூறு

கூத்தராற்றுப்படை என்று அழைக்கப்படும் நூல்  -  மலைபடுகடாம்

முருகு அல்லது புலவராற்றுப்படை என்று அழைக்கப்படும் நூல்  -  திருமுருகாற்றுப்படை

முப்பால், முப்பானூல், தெய்வ நூல், தமிழ் மறை, பொய்யாமொழி, வாயுரை என்று அழைக்கப்படும் நூல்  -  திருக்குறள்

வேளாண் வேதம் என்று அழைக்கப்படும் நூல்  -   நாலடியார்

அறவுரைக் கோவை என்று அழைக்கப்படும் நூல்  -  முதுமொழிக் காஞ்சி

திராவிட வேதம் என்று அழைக்கப்படும் நூல்  -  திருவாய்மொழி, நாலாயிரத் திவ்யப் பிரபந்தம்

அறுபத்து மூவர் புராணம், திருத்தொண்டர் புராணம் என்று அழைக்கப்படும் நூல்  -  பெரிய புராணம்

தமிழ் மூவாயிரம் என்று அழைக்கப்படும் நூல்  -  திருமந்திரம்

குட்டித் திருக்குறள் என்று அழைக்கப்படும் நூல்  -  ஏலாதி

ஆதியுலா, ஞான உலா என்று அழைக்கப்படும் நூல்  -  திருக்கயிலாய ஞான உலா

மூதுரை, முதுமொழி என்று அழைக்கப்படும் நூல்  -  பழமொழி

குட்டித் தொல்காப்பியம் என்று அழைக்கப்படும் நூல்  -  இலக்கண விளக்கம்

குட்டித் திருவாசகம் என்று அழைக்கப்படும் நூல்  -  திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி

வழிநூல் என்று அழைக்கப்படும் நூல்  -  கம்பராமாயணம்

மண நூல் என்று அழைக்கப்படும் நூல்  - சீவகசிந்தாமணி

தென்தமிழ் தெய்வப்பரணி என்று அழைக்கப்படும் நூல்  -  கலிங்கத்துப்பரணி

தமிழ்மொழியின் உபநிடதம் என்று அழைக்கப்படும் நூல்  -  தாயுமானவர் பாடல்கள் 

Post a Comment

0 Comments