TNPSC Master publishes relevant fact based Current Affairs almost daily basis. In this current affairs helps you and useful for General Awareness part of TNPSC, UPSC, SSC IBPS Banking and other State Public Service Commission examination. TNPSC Master is a compilation of recent current events. In This section is updated almost daily events, Innovation, Achievement, Awards and New Appointments etc.
ஜல்லிக்கட்டு தடை நீங்கியது: அவசரச் சட்டம் பிறப்பித்தார் ஆளுநர்
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்துவதற்கான தடை நீங்கியது. இதற்கான அவசரச் சட்டத்தை ஆளுநர் வித்யாசாகர் ராவ் சனிக்கிழமை மாலை பிறப்பித்தார். இதைத் தொடர்ந்து, அலங்காநல்லூரில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.22) காலை 10 மணிக்கு நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைக்கிறார். குடியரசுத் தலைவரால் உத்தரவு வழங்கப்பட்ட மத்திய அரசின் மிருகவதை தடுப்புச் சட்டத்துக்கான மாநில அரசின் சட்டத் திருத்தத்துக்கு ஆளுநரின் ஒப்புதல் சனிக்கிழமை பெறப்பட்டுள்ளது. எனவே, ஜல்லிக்கட்டுக்கான அனைத்துத் தடைகளும் நீக்கப்பட்டு ஜல்லிக்கட்டு காளைகளின் தளைகள் அவிழ்க்கப்பட்டு விட்டன. அரசமைப்புச் சட்டப்படி அவசரச் சட்டத்துக்கு மாற்றாக சட்ட முன்வடிவு வரும் திங்கள்கிழமை (ஜன.23) தொடங்கவுள்ள பேரவை கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு பயன்படும் 8 தொழில்நுட்பங்கள்: கால்நடை பல்கலை.யில் அறிமுகம்
விவசாயிகளுக்குப் பயன்படும் 8 புதிய தொழில்நுட்பங்களை தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது. 21 நாள்களில் 180 கிலோ எடை அளவுக்கு வளரும் நாமக்கல் இறைச்சிக் காடை, மாடுகளின் கருத்தரிப்பு சாதனம், மாடுகளுக்கு காணப்படும் தோல் நோய்களைக் குணமாக்கும் நானோ களிம்பு, கறவை மாடுகளின் காம்புகளை நோய்த்தொற்றில் இருந்து காக்கும் கலன், புதிய வகை ஆட்டுக் கிட்டி, மாடுகளை தாங்கி நிறுத்தும் கருவி, கறவை மாடுகளுக்கான புதிய இனப்பெருக்க சிகிச்சை ஆகிய கால்நடை வளர்ப்பு சார்ந்த 7 தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. மேலும் கால்நடை மற்றும் கோழிப் பண்ணையாளர்களுக்கு தகவல்களை அளிக்கவும், தகவல் பரிமாற்றத்துக்கும் உதவும் வகையிலும் செல்லிடப்பேசி செயலி தொழில்நுட்பமும் அறிமுகம் செய்யப்பட்டது.
குடியரசுதினம்: முதல் முறையாக கொடியேற்றுகிறார் முதல்வர்
குடியரசு தினத்தின்போது, ஆளுநர் கொடியேற்றுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு குடியரசு தினத்தின் போது, முதல்வராக உள்ள ஓ.பன்னீர்செல்வம் தேசியக் கொடியை ஏற்றவுள்ளார். தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராகவும், மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளுநராகவும் உள்ள வித்யாசாகர் ராவ், அந்த மாநிலத்தில் கொடியேற்றவுள்ளதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் அரசு சார்பில் மெரீனா கடற்கரை காந்தி சிலை அருகே 26-ஆம் தேதி காலை 8 மணிக்கு குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது.
"முப்படைத் தளபதிகள் மாநாட்டுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி
உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் முப்படைத் தளபதிகளின் மாநாடு சனிக்கிழமை (21.01.2017) நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, முப்படைத் தளபதிகள் கலந்து கொண்டனர்.
டிரம்ப் - புதின் இணைந்து செயல்பட வேண்டும்
உலகில் அமையை நிலைநாட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும், ரஷிய அதிபர் விளாதிமீர் புதினும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று திபெத்திய பெளத்த மதத் தலைவர் தலாய் லாமா வலியுறுத்தியுள்ளார்.
ஒரே நேரத்தில் 3.5 லட்சம் பேர் தேசிய கீதம் பாடி உலக சாதனை
குஜராத் மாநிலம், ராஜ்கோட் மாவட்டத்தில் சனிக்கிழமை (21.01.2017) ஒரே நேரத்தில் சுமார் 3.5 லட்சம் பேர் தேசிய கீதம் பாடி, புதிய உலக சாதனை படைத்தனர். ராஜ்கோட்டிலுள்ள கக்வாட் என்ற இடத்தில், சுமார் ரூ.60 கோடி செலவில் "கோடியார்' அம்மனுக்கு கட்டப்பட்ட பிரமாண்ட கோயிலில் சிலை பிரதிஷ்டை விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவின்போது, சுமார் 3.5 லட்சம் பேர் ஒரே நேரத்தில் தேசிய கீதம் பாடி "கின்னஸ்' சாதனை நிகழ்த்தியுள்ளனர்.
அமெரிக்க அதிபராகப் பதவியேற்றார் டிரம்ப்
அமெரிக்காவின் 45-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை பதவியேற்றார். வாஷிங்டனில் உள்ள அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் அதிக வயதில் (70) அமெரிக்க அதிபராகப் பதவியேற்றவர் என்ற சாதனையை டிரம்ப் படைத்துள்ளார்.
ஒபாமா மருத்துவ காப்பீட்டுத் திட்டம் ரத்து: அமெரிக்க அதிபராக டிரம்ப் முதல் கையெழுத்து
அமெரிக்காவின் முந்தைய அதிபர் ஒபாமா அறிமுகம் செய்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை ரத்து செய்து, மாற்றுத் திட்டத்தைக் கொண்டு வரும் உத்தரவில் புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார்.
நேபாளம் உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் ரயில் போக்குவரத்து: மத்திய அரசு திட்டம்
நேபாளம், வங்கதேசம், பூடான், மியான்மர் உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் ரயில் போக்குவரத்து தொடர்பை உருவாக்குவது குறித்து மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. மேற்கு வங்க மாநிலம், டார்ஜீலிங்கில் இந்திய ரயில்வே துறைக்கும், யுனெஸ்கோ அமைப்புக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை கையெழுத்தானது
அனுராக் தாக்குருக்கு புதிய பதவி
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) முன்னாள் தலைவரான அனுராக் தாக்குர், ஹிமாசல பிரதேச ஒலிம்பிக் சங்கத் தலைவராக சனிக்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.
மலேசிய மாஸ்டர்ஸ் இறுதிச்சுற்றில் சாய்னா
மலேசியாவில் நடைபெறும் மாஸ்டர்ஸ் கிராண்ட் ஃப்ரீ பாட்மிண்டன் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு இந்தியாவின் சாய்னா நெவால் சனிக்கிழமை (21.01.2017) முன்னேறினார்.
தேசிய இளையோர் குத்துச்சண்டை: இறுதிச்சுற்றில் மன்தீப் கெளர்
தேசிய இளையோர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் பஞ்சாப் வீராங்கனை மன்தீப் கெளர் 57 கிலோ எடைப் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு சனிக்கிழமை முன்னேறினார்.
Post a Comment